Thursday 12 October 2017

பெயராகிய ஒரு மனிதனை உன்னுடன் இணைத்து மாயக் கயிரால் பிணைத்து சூட்சும முடிச்சால் பினைக்கப்பட்டு உள்ளது

பெயரை ஒரு ஆற்றல் காலமாக பார்
பெயரின்  நோக்கம் தனிமனிதனுக்கு உதவுவது.
பெயரை ஒரு மனிதனாக பார்
பெயராகிய ஒரு  மனிதனை உன்னுடன் இணைத்து மாயக் கயிரால் பிணைத்து சூட்சும முடிச்சால் பினைக்கப்பட்டு உள்ளது  
பெயரின் ஒரே குறிக்கோள் தனிமனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதுதான்..
அறியாமையில் இருந்து ஞானத்துக்கும், மரணத்தில் இருந்து அமர வாழ்வுக்கும், மாறும் பொய்யில் இருந்து மாறாத உண்மைக்கும் மனிதனை அழைத்துச் செல்வதுதான் பெயரின்  முடிவான நோக்கம்.
பெயர் மாறாதது.
உலகியல் மற்றும் அறிவியல் ஞானங்கள் மாற்றத்துக்கு உட்பட்டவை. நமக்குத் தெரிந்த அனைத்துப் பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அவற்றைச் சார்ந்து இயற்றப்பட்ட அறிவு நூல்களும் மாற்றப்பட வேண்டியவையே. ஒரு அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு சரித்திரம்கூட மாற்றி எழுதப்படலாம். ஆனால், பெயர் எப்போதும் மாறாதது. அதில் உள்ள ஞானம் முழுமையானது. எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் இந்த ஞானம் வாழ்க்கையை வாழும் சரியான முறையைச் சுட்டிக்காட்ட வல்லது.
பெயரினை பற்றி அறிய குரு அவசியம்
யாராலும் பெயரை பற்றி  தானாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. முறையாக குருவிடம் இருந்து பயின்ற ஒருவரிடம்தான் பெயரை பற்றி  கற்றுக்கொள்ள முடியும்.
பெயருக்கு  பல ஆசிரியர்கள் வெவ்வேறு பொருள் கூறுவதுபோலத் தோன்றினாலும் அது வெறும் தோற்றம் மட்டுமே. உண்மையில் பெயர் கூறும் ஒரே உண்மையைத்தான் மாணவர்களின் புத்திக் கூர்மைக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு முறையில் ஆசிரியர்கள் கூறி வருகிறார்கள். உலகில் உள்ள மக்களின் புத்திசாலித்தனம் ஒருவருக்கொருவர் மிகவும் மாறுபடுகிறது. எல்லோராலும் பெயரை  முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஆனால், பெயர்  அனைத்து மனிதர்களுக்குமான வழிகாட்டி  எனவே, அவரவர் நிலைக்கு ஏற்ற விதத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் போதனைகள் மூலம் அனைத்து மனிதர்களும் பெயரின்  பயனை அடைந்து வருகிறார்கள்.
பெயரில்  நம்பிக்கை அவசியம்
ஒரு உபகரணத்தை உபயோகிக்க அதன் உடன்வரும் வழிகாட்டிப் புத்தகத்தை (User Manual) தினமும் நாம் படித்துக்கொண்டிருப்பது இல்லை. உபகரணத்தை சரியான முறையில் உபயோகிக்க கற்றுக்கொண்டவுடன் அந்தப் புத்தகம் தேவையில்லை. அதுபோலவே, வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சரியாகத் தெரியும்வரை நாம் பெயரில்  நம்பிக்கை கொண்டு அதை முறையாகப் பயன்படுத்துவது  அவசியம். வாழ்க்கையின் குறிக்கோளான குறையாத இன்பம், நிலையான அமைதி, நிரந்தரமான பாதுகாப்பு இவற்றை அடைந்தபின் பெயர்  நமக்கு எவ்வளவு  அவசியமானது என்பது புரிந்துவிடும் .
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம்என்பதன் பொருள் மனம் செம்மையாகும்வரை நிச்சயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பதே. நமது மனம் செம்மையானபின்தான் எல்லாம் இன்பமயம்என்று உலக வாழ்வைச் சரியான நோக்கில் நம்மால் பார்க்க முடியும். எனவே, அதுவரை நமக்கு பெயர் மந்திரம்  மிக அவசியம். அதில் முழு நம்பிக்கை இருந்தால்தான் அதன் பலன்கள் நமக்குக் கிடைக்கும்.


பெயர் எந்த விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது
ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள தொடக்க நிலை மாணவர்களுக்கும் உயர்நிலை மாணவர்களுக்கும் ஒரே ஒரு பாடப் புத்தகம் கொடுக்கப்பட்டால் அது அதிக பக்கங்களைக் கொண்டதாகவும் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கடைசிப் பக்கங்களில் உள்ள பாடங்கள் முற்றிலும் புரியாது. பத்தாம் வகுப்பு மாணவனுக்கு முதலில் உள்ள சில பாடங்கள் அவசியம் இல்லாதவை என்று தோன்றும். பெயரின்  நிலையும் இது போன்றதே.
பெயர் இரண்டு பாகங்களைக்கொண்டது. இனிசியல்,கூப்பிடும் பெயர் ,கையெழுத்திடும் பெயர் முதல் பாகம் கர்ம காண்டம்’. இரண்டாவது பாகம் உனது பெயர் ஞானகாண்டம்அல்லது வேதாந்தம்’.
வாழ்க்கை எனும் செயல்முறைக் கல்விச் சாலையில் நாம் நம்முடைய ஒவ்வொரு செயலில் இருந்தும் அறிவையும் மனப்பக்குவத்தையும் அடைகிறோம். அந்த அறிவு முதிர்ந்து தேவையான மனப்பக்குவத்தை நாம் அடையும்போதுதான் பெயரை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு, பெயரை பற்றி   படிக்க முற்படுவோம்.
அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள் பெயரை  அறிந்து குறைவில்லாத இன்பத்தை அனுபவிப்பதுதான். எனினும், எல்லோரும் அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் முடிவான நோக்கம், பள்ளியின் இறுதித் தேர்வில் வெற்றி பெறுவதுதான் என்றாலும் தகுதியற்றவர்களை ஆசிரியர்கள் தேர்வுக்கு அனுப்புவதில்லை. அதுபோலவே, நமது தகுதியை ஆராய்ந்து நமக்கு ஏற்ற உபதேசத்தைச் செய்வது நமது குருவின் கடமை. பெரும்பாலான மக்களுக்கு பெயர் சார்ந்த  அறிவில் தங்களுடைய நிலையைத் தாங்களாக உணரும் சக்தி இருப்பதில்லை. எனவேதான், குருவின் துணை அவசியமாகிறது.
பெயர் நமக்கு அடையாளம் காட்டப் பல்வேறு படிகளின் வாயிலாக நம்மை அழைத்து செல்கிறது.
முதல் படி: கர்மயோகம்
நமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாகவும், செம்மையாகவும், முழு ஈடுபாட்டுடனும் அதேநேரத்தில் பலனில் பற்று வைக்காமல் செய்வதுதான் கர்மயோகம். பணம், பதவி, புகழ் முதலிய நோக்கங்களுக்காகச் செய்யப்படும் செயல்கள் கர்மயோகம் ஆகாது. நமது மனம் பக்குவப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களே கர்மயோகம்.
கர்மயோகத்தின் பலன் மனப்பக்குவம்.
இரண்டாவது படி: கற்றல்
பெயரை  முறையாக ஆசிரியரிடம் இருந்து தொடர்ந்து நீண்ட நாட்கள் கற்க வேண்டும். ஆசிரியர் போதிப்பது புரியவில்லை என்றால் தவறு ஆசிரியர் மீதோ பெயரின் மீதோ இல்லை என்ற உறுதியுடன்எனக்குப் புரியவில்லைஎன்ற மனோபாவத்துடன் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டுச் சரியான அறிவை அடைய வேண்டும். பெயரில்   சொல்லப்பட்டு இருப்பது இதுதான் என்ற திடமான எண்ணம் வரும்வரை கற்றல் தொடர வேண்டும்.
மூன்றாவது படி: கசடறக் கற்றல்
பெயர் சொல்வது என்ன என்பது சரியாகத் தெரிந்தவுடன் நாம் அடுத்தபடியாக பெயர் சொல்வது சரியா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். பெயர் சொல்லும் முடிவை, யுக்தி மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் ஆராய வேண்டும். பெயரின் கருத்து யுக்திக்குப் பொருந்தாமலோ அனுபவத்துக்கு முரணாகவோ இருந்தால் ஆசிரியரை அணுகி முறையுடன் கேள்விகள் கேட்க வேண்டும். நமது எல்லாக் கேள்விகளுக்கும் நமது சந்தேகங்கள் தீரும்வரை பதில் சொல்ல வேண்டியது ஆசிரியரின் கடமை.
பெயரின் கருத்துக்களை எந்தவித சந்தேகங்களும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு நாம் அடுத்த படிக்கு செல்லத் தயாராவோம். இந்த நிலையில் எதைத் தெரிந்து கொண்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டதற்குச் சமம் ஆகுமோ, அதை நாம் தெரிந்து கொண்டிருப்போம்.
நான்காவது படி: நிற்க அதற்கு தக.
பெயரில் இருந்து நமக்குக் கிடைத்த பலனில் நாம் நிலைத்து நிற்கக் கொஞ்ச
காலம் ஆகும். இந்தப் படியில் ஆசிரியர் நமக்கு அவ்வளவாகத் துணை செய்ய முடியாது. நாம் தினசரி  செய்கிற  பயிற்சி மூலம் சுயமுயற்சியால் மட்டுமே பலனில்  நிலைபெற வேண்டும்
உணவு உண்ண ஆரம்பித்தவுடன் பசி குறைய ஆரம்பிப்பதுபோல இந்தப் படியின் துவக்கத்தில் இருந்து நாம் குறைவில்லாத இன்பத்தை அடைய ஆரம்பித்து விடுவோம். கூடிய விரைவில் நாம் நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்து விடுவோம்.

அதற்கு பிறகு நாம் செய்ய வேண்டியது என்று ஒன்றும் இருக்காது.

No comments:

Post a Comment